போதைப் பொருள் கடத்தும் கும்பலுடன் தொடர்பு..! முகமது பைசிலை கைது செய்த அதிகாரிகள்..!

போதைப் பொருள் கடத்தி வரும் கும்பலுடன் தொடர்புடையவர் தையூரில் பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்தது...

Update: 2022-08-06 04:03 GMT

போதைப் பொருள் கடத்தி வரும் கும்பலுடன் தொடர்புடையவர் தையூரில் பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்தது.

  • இதுகுறித்து அவர்கள் சோதனை நடத்திய போது முகமது பைசில் என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போது கஞ்சா, அபின் போன்ற பொருட்களை கடத்தும் கும்பலுடன் முகமது பைசில் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
  • இலங்கையை பூர்வீகமாக கொண்ட முகமது பைசில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
  • டில்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியேறிய அவர், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள கழிப்பட்டூர் என்ற இடத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பாக குடும்பத்துடன் குடியேறி உள்ளார்.
  • கைது செய்யப்பட்ட முகமது பைசிலிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. முன்னதாக அவரிடம் இருந்து டிஜிட்டல் சாதனங்கள், லேப்டாப், கைபேசி, சிம்கார்டு, இலங்கை பாஸ்போர்ட், இந்தியா பான் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்