சென்னையில் சைலண்ட் ஆபரேஷன்.. போலீஸின் தரமான செய்கை

Update: 2024-04-25 07:51 GMT

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க சென்னையில் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடந்த 28 நாட்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பன செய்ததாக 144 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 65 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயிரத்து 63 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 206 கிலோ மாவா, 2 ஆயிரத்து 340 வெளிநாட்டு சிகரெட்டுகள், 3 செல்போன்கள், 50 ஆயிரத்து 320 ரூபாய் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்