நகர்மன்ற கூட்டத்தில் போராட்டத்தில் குதித்த பெண் கவுன்சிலர்

Update: 2023-09-30 02:42 GMT

ராணிப்பேட்டை நகர் மன்ற கூட்டத்தில், கவுன்சிலர் ஒருவர் வாயில் பிளாஸ்டர் ஒட்டிக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். ராணிப்பேட்டை மாவட்டம், நகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 26-வது வார்டு அதிமுக நகரமன்ற உறுப்பினர் ஜோதி சேதுராமன், தனது வாயில் பிளாஸ்டர் ஒட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். தனது வார்டுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பலமுறை நகர்மன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்