நிறைமாத கர்ப்பிணி பெண் காவலருக்கு காவல் நிலையத்திலேயே வளைகாப்பு - சென்னையில் நெகிழ்ச்சிகர சம்பவம்

Update: 2023-09-02 16:09 GMT

சென்னை புழல் காவல் நிலையத்தில் நிறைமாத கர்ப்பிணி காவலருக்கு காவல் நிலையத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது... முதல் நிலை காவலர் பிரியாவுக்கு வளைகாப்பு நடத்தி அழகுபார்க்க நினைத்த சக காவலர்கள், உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர்... அதன்படி, பிரியாவிற்கு காவல் நிலையத்தில் வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. கொளத்தூர் காவல் துணை ஆணையர் சக்திவேல் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள், சக காவலர்கள் பிரியாவிற்கு நலங்கு வைத்தும், நெற்றியில் திலகமிட்டும், கையில் வளையல் அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து காவல் துணை ஆணையர் 5 வகை உணவுகளை பெண் காவலருக்கு ஊட்டி விட்டது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது...

Tags:    

மேலும் செய்திகள்