மனைவியுடன் தொடர்பில் இருந்த நபர் - கம்பியால் அடித்து கொன்ற கணவன்

மனைவியுடன் தொடர்பில் இருந்த நபர் - கம்பியால் அடித்து கொன்ற கணவன்

Update: 2021-10-05 04:40 GMT
மனைவியுடன் தொடர்பில் இருந்த நபர் - கம்பியால் அடித்து கொன்ற கணவன் 

கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ் பூங்குருதி பகுதியில் மனைவியுடன் தொடர்பில் இருந்த நபரை அடித்துக் கொன்ற கணவனை போலீசார் தேடிவருகின்றனர். கீழ்பூங்குருதி பகுதியை சேர்ந்த கதிரேசன் என்பவரின் மனைவி பாரதி, ரகுபதி என்பவர் உடன் தொடர்பில் இருந்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கதிரேசன் உடன் வாழ பிடிக்கவில்லை எனவும் விவாகரத்து வேண்டும் என்றும் பாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோபமடைந்த கதிரேசன் தனது உறவினர்கள் உடன் சென்று ரகுபதியை கம்பியால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கதிரேசன் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்