கொடநாடு வழக்கு - செப்.2க்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணையை செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-08-27 11:12 GMT
கொடநாடு வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று  தொடங்கிய நிலையில், கொடநாடு வழக்கில் 35 வது சாட்சியாக உள்ள அனுபவ் ரவி மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்  என அனுபவ் ரவி தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.இதற்கு எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் கடும்  எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே நீதிமன்றத்தில்  கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது  குறுக்கீட்ட நீதிபதி இரு தரப்பினரையும் சமாதானம் படுத்தினார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு வரும் வரை வழக்கு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைப்வைப்பதாக தெரிவித்தனர். அப்போது  ஒருநாள் விட்டு ஒருநாள் வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தனர். இந்தநிலையில் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் எதிர்தரப்பு சாட்சியங்கள் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்