நாகை மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு - இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

நாகை மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-08-03 07:02 GMT
கடந்த 28 ஆம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டையை சேர்ந்த கெளதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், கலைச்செல்வன் என்ற மீனவர் மீது ஒரு துப்பாக்கி குண்டு உரசி சென்றதில் அவர் தலையில் பலத்த காயமடைந்துள்ளார். 
தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், படகில் சென்ற முருகானந்தம் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் படி, இலங்கை கடற்படையை சேர்ந்த 7 பேர் மீது வேதாரண்யம் கடலோர காவல்படையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்