தேவாலயத்தின் போர்வையில் பாலியல் தொழில் - 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், எஸ்.டி மங்காடு பகுதியில் தேவாலயத்தின் போர்வையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-07-13 05:28 GMT
மத போதகரான லால் ஷைன் சிங் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பெடரல் சர்ச் ஆப் இந்தியா என்ற பெயரில் தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு  இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் சொகுசு கார்களில் வந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய சோதனையில், தேவாலயத்தின் போர்வையில் அங்கு பாலியல் தொழில் செய்யப்படுவது தெரியவந்தது. அங்கு இருந்த தாய், மகள் உள்ளிட்ட பெண்கள் மற்றும் லால் ஷைன் சிங் என 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லால் ஷைன் சிங், ஷிபின் ஆகியோர் அந்த பெண்களோடு இணைந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். மேலும், 19 வயது பெண்ணை அவரது தாயாரே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மீது நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்