"பள்ளிகளை சிகிச்சை மையமாக மாற்றலாம்" - அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன்

நாகை மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-25 05:30 GMT
நாகை மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய நெகட்டிவ் சான்றிதழ் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினார். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஆரம்ப நிலையில் உள்ளவர்களை தனிமைப்படுத்தி தங்க வைக்க  கிராமப்புறங்களில் உள்ள  பள்ளிகளை சிகிச்சை மையமாக மாற்ற வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார். குடும்ப அட்டைகளுக்கு அரசு பல்ஸ் ஆக்ஸி மீட்டரை இலவசமாக வழங்க வேண்டும் என்று ஓ.எஸ். மணியன் கேட்டு கொண்டார்.  

Tags:    

மேலும் செய்திகள்