75 ஆயிரம் கோவேக்சின் கொரோனா தடுப்பூசிகள் ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்தடைந்தன

ஐதராபாத்தில் இருந்து 75 ஆயிரம் கோவேக்சின் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.

Update: 2021-05-04 10:59 GMT
ஐதராபாத்தில் இருந்து 75 ஆயிரம் கோவேக்சின் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. 

தமிழகத்தில் கொரோனா வைரசின் 2வது அலையானது அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், தடுப்பூசி பற்றாக்குறையும் பரவலாக ஏற்பட்டுள்ளதால் கூடுதல் தடுப்பூசிகள் வழங்கக் கோரி மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில்,  ஐதராபாத்தில் இருந்து 75 ஆயிரம் கோவேக்சின் தடுப்பு மருந்துகள் அடங்கிய 16 தொகுப்புகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட விமானம் இன்று காலை 9 மணிக்கு சென்னை வந்தடைந்தது. இதையடுத்து, இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மருத்துவ தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்