7.5% இடஒதுக்கீடு: "இந்த ஆண்டே நடைமுறைக்கு கொண்டு வருவோம்" - முதலமைச்சர் பழனிசாமி உறுதி
தேவர் குருபூஜையை யொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 7 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீட்டை வைத்து சிலர் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார். இந்த ஆண்டே 7 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வருவோம் என்றும், அப்போது அவர் உறுதிபடக் கூறினார்.