பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூச்சு - "குண்டர் சட்டத்தில் கைது செய்க" ராமதாஸ்

திருச்சி மற்றும் திண்டுக்கல் அருகே பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-10-27 09:44 GMT
தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பெரியாரின் கொள்கைகளை எதிர்கொள்ள துணிச்சல் இல்லாதவர்கள் தான் இத்தகைய செயலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த இரு குற்றங்களிலும் சம்பந்தப்பட்டவர்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்