ஊராட்சி தலைவர் அவமதிக்கப்பட்ட விவகாரம்: ஊராட்சி செயலர் சஸ்பெண்ட் - ஆட்சியர் அதிரடி

சிதம்பரம் அருகே தெற்குத் திட்டை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவாகரத்தில், ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2020-10-10 06:32 GMT
சிதம்பரம் அருகே தெற்குத் திட்டை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவாகரத்தில், ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை சஸ்பெண்ட் செய்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தெற்கு திட்டை ஊராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்