ஆலந்தூரில் முக கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம்

ஆலந்தூரில் மண்டல மாநகராட்சி செயற்பொறியாளர் முரளி தலைமையில் உதவி பொறியாளர் செலின் மேரி சுகாதார ஆய்வாளர் அசோக்குமார் ஆகியோர் அதிரடி சோதனை செய்தனர்.

Update: 2020-09-10 09:01 GMT
ஆலந்தூரில் மண்டல மாநகராட்சி செயற்பொறியாளர் முரளி தலைமையில் உதவி பொறியாளர் செலின் மேரி, சுகாதார ஆய்வாளர் அசோக்குமார் ஆகியோர் அதிரடி சோதனை செய்தனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த 50க்கும் மேற்பட்டவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், சாப்பிடக் கூட பணம் இல்லாமல் தவிப்பதாகவும், தங்களால் அபராதத்தை செலுத்த முடியாது என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்