அவனியாபுரம் காவலர் மயங்கி விழுந்து திடீர் சாவு - காவலர் மரணத்துக்கு கொரோனா காரணமா?

மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றிய 29 வயதான முத்துக்குமார் என்பவர், நேற்று பணிக்கு செல்லும்போது, வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார்.

Update: 2020-09-06 16:54 GMT
மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றிய 29 வயதான முத்துக்குமார் என்பவர், நேற்று பணிக்கு செல்லும்போது, வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த முத்துக்குமார் சில தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை எடுத்து முடிவுகள் வெளிவராத நிலையில், அவரது மரணத்துக்கு கொரோனா வைரஸ் காரணமா என்று சந்தேகிக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்