சொத்து தகராறில் நடந்த பயங்கர சம்பவம் - தாயை கத்தியால் குத்திய மகன் கைது

சென்னையில் சொத்து தகராறில் தாயை கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-09-04 12:51 GMT
சென்னையில் சொத்து தகராறில் தாயை கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர். வண்டலூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் அருகே வசிப்பவர் ஆலயம்மாள். 70 வயதான இவருக்கும், இவரின் மகன் பூபதிக்கும் இடையே அடிக்கடி  சொத்து தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று தன் தாயிடம் சொத்து கேட்டு தகராறு செய்த பூபதி, திடீரென தான் வைத்திருந்த கத்தியை எடுத்து தன் தாயை குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் பூபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்