கீழமை நீதிமன்றங்களில் செப்டம்பர் 7 முதல் நேரடி விசாரணை- சென்னை உயர் நீதிமன்ற நிர்வாக குழு முடிவு

தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கீழமை நீதிமன்றங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டு விட்டன.

Update: 2020-09-02 10:57 GMT
தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கீழமை நீதிமன்றங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டு விட்டன.  வழக்குகள் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கும், சாட்சிகளுக்கும் மட்டும் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்,. இதனையடுத்து நீதிமன்ற வளாகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய முதன்மை நீதிபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் செப்டம்பர் 7 முதல் நேரடி விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது,. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாக குழு இதனை முடிவு செய்துள்ளது
Tags:    

மேலும் செய்திகள்