பாஜகவில் இணைந்தார், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்துள்ளார்.

Update: 2020-08-25 13:00 GMT
கர்நாடக காவல்துறையில் பணியாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, சிங்கம் போலீஸ் என அழைக்கப்பட்டார்.திடீரென ஐ.பி.எஸ். பணியில் இருந்து விலகிய அவர், தற்சார்பு விவசாயத்தில் இறங்கினார். தமிழக அரசியலில் களமிறங்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இன்று பாஜகவில் அவர் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ், தமிழக தலைவர் முருகன் முன்னிலையில் இணைந்த அவர், நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்யாத ஒரு கட்சி பாஜக என கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்