நாளை சுதந்திரதின கிராம சபைக் கூட்டம் நடைபெறாது - கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு நடவடிக்கை

மாநிலம் முழுவதும் சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-08-14 04:03 GMT
மாநிலம் முழுவதும் சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராமசபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நாளை கிராமசபைக் கூட்டத்தை நடத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்