நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அஞ்சலி - குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 22 தமிழர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் தெரிவித்தார்.

Update: 2020-08-10 08:59 GMT
கயத்தார் பாரதிநகர் பகுதியில்  நிலச்சரிவில் பலியானவர்களின் படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் அமைச்சர் கடம்பூர்ராஜூ மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க முதல்வரிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு உறுதியளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்