நீலகிரி மாவட்டத்திற்கு புதிய மருத்துவக் கல்லூரி - நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
நீலகிரி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழகத்தில் ஏற்கனவே, 10 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 11வதாக புதிய மருத்துவக் கல்லூரி நீலகிரி மாவட்டத்தில் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல்லை முதலமைச்சர் பழனிச்சாமி நாளை நாட்டி வைக்கவுள்ளார். உதகையில் 25 ஏக்கர் நிலப்பரப்பில், 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவக்கல்லூரி உடனான மருத்துவமனை அமைய உள்ளது. இதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக 150 மருத்துவ இடங்கள் கிடைக்கவுள்ளன.