பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை - செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் உதவி நிர்வாக அலுவலர் ஜஸ்டின் ஆரோன் என்பவர், அதே அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் பகவதி என்பவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

Update: 2020-07-08 12:28 GMT
திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் உதவி நிர்வாக அலுவலர் ஜஸ்டின் ஆரோன் என்பவர், அதே அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் பகவதி என்பவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால், சிஐடியு தொழிற்சங்கம் மற்றும் மாதர் சங்கம் சார்பில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் சுமார் இரண்டு மணி நேரம் திருச்செந்தூர் சொற் பொறியாளர் அலுவலகத்தில் தொடர்  காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்