ஐ.டி. நிறுவனத்தினருடன் அமைச்சர் உதயகுமார் ஆலோசனை

ஐ.டி. நிறுவனத்தினருடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை நடத்தினார்.

Update: 2020-07-01 16:49 GMT
ஐ.டி. நிறுவனத்தினருடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள சிங்காரவேலர் மாளிகையில் தகவல் தொழில்நுட்ப நிறுவன நிர்வாகிகளோடு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில், வரும் 6 ஆம் தேதி முதல்  50 சதவிகித ஊழியர்களுடன் ஐ.டி. நிறுவனங்கள் செயல்படலாம் என முதலமைச்சர் அறிவித்த நிலையில், நிறுவனங்கள் எப்படி செயல்பட வேண்டும் என விளக்கினார். அரசின் விதிமுறைகளை கடைபிடிப்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்திய அமைச்சர், ஐ.டி. நிறுவன கோரிக்கைகளை கேட்டறிந்தார். 
Tags:    

மேலும் செய்திகள்