முழு ஊரடங்கு - மதுரையில் வாகன சோதனை தீவிரம்

மதுரையில் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், அதனை மீறி வெளியில் சுற்றித் திரியும் நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

Update: 2020-06-24 08:02 GMT
மதுரையில் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், அதனை மீறி வெளியில் சுற்றித் திரியும் நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். மதுரை கோரிப்பாளையம் பிரதான சாலையில் காவல்துறையினர் இன்று அதிகாலையிலிருந்தே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், தேவையின்றி வாகனத்தில் வருபவர்களுக்கு போலீசார் 500 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். மேலும், முக கவசம் அணியாமல் வந்தாலும், இருசக்கர வாகனங்களில் 2 பேர் வந்தாலும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்