யாசகம் பெற்ற பணத்தை கொரோனா நிதியாக வழங்கிய நபர் - ரூ.30 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்

மதுரையில் யாசகமாக பெற்ற 30 ஆயிரம் ரூபாயை ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

Update: 2020-06-13 06:52 GMT
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் பொதுச் சேவையில் ஆர்வம் உள்ளவர். இவர் தற்போது மதுரையில் வசித்து வரும் நிலையில், தான் யாசகமாக பெற்ற 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். தொடர்ந்து தன் தேவைக்கு போக மற்ற பணத்தை நிவாரணமாக வழங்குவேன் என்றும் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்