கைதிகளுக்கான பரோல் நீட்டிப்பு ரத்து - 15ஆம் தேதிக்குள் சரணடைய உத்தரவு

தமிழகத்தில், பரோலில் சென்ற சிறை கைதிகள் ஊரடங்கு காரணமாக சிறைக்கு திரும்ப முடியாத சூழல் இருந்ததால் அவர்களுக்கான பரோல் காலத்தை நீட்டித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

Update: 2020-06-10 05:15 GMT
தமிழகத்தில், பரோலில் சென்ற சிறை கைதிகள் ஊரடங்கு காரணமாக சிறைக்கு திரும்ப முடியாத சூழல் இருந்ததால் அவர்களுக்கான பரோல் காலத்தை நீட்டித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை வந்த போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கைதிகளை சிறைகளில் தனிமைப்படுத்த தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி., அனுப்பிய கடிதத்தை மேற்கோள்காட்டி, 11 கைதிகளுக்கான பரோல் நீட்டிப்பு உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள்,11 கைதிகளும் ஜூன் 15ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட சிறை கண்காணிப்பாளர் முன் சரணடைய  உத்தரவிட்டனர்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
Tags:    

மேலும் செய்திகள்