நிலத்தை குளிர்வித்த கோடைமழை - நாற்று நடவை தொடங்கிய விவசாயிகள்

கனமழையால் ஏற்பட்ட சாதகமான சூழலை தொடர்ந்து, நெல் நாத்து நடவு பணியை புதுக்கோட்டை விவசாயிகள் தொடங்கினர்.

Update: 2020-05-29 15:20 GMT
கனமழையால் ஏற்பட்ட சாதகமான சூழலை தொடர்ந்து, நெல் நாத்து நடவு பணியை புதுக்கோட்டை விவசாயிகள் தொடங்கினர். வயல்களில் நீர் தேங்கி இருப்பதால், நாற்று நடவு செய்ய ஏதுவாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். பெரியவர்களுக்கு இணையாக  சிறார்களும், சேற்றில் இறங்கி நாற்று நடவு செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இதைக் கண்டு பூரித்து போன பெரியவர்கள், எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் விவசாயம் செழிக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்