வடமாநிலங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் - சென்னையில் இருந்து 3 ஆயிரம் பேர் பயணம்
தமிழகத்தில் பணியாற்றி வரும், வட மாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பணியாற்றி வரும், வட மாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். சென்னையில் இருந்து அசாம், பீகார், ஜார்க்கண்ட், மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு இயக்கப்பட்ட 4 சிறப்பு ரயில்களில், தொழிலாளர்கள், மாணவர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். நேரு விளையாட்டு அரங்கில், ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்தவர்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.