கொரோனாவில் இருந்து மீண்ட செவிலியர் - மலர் தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்

கொரோனாவில் இருந்து மீண்ட செவிலியருக்கு மலர் தூவி வரவேற்பு வழங்கப்பட்டது.

Update: 2020-05-14 03:38 GMT
கொரோனாவில் இருந்து மீண்ட செவிலியருக்கு மலர் தூவி வரவேற்பு வழங்கப்பட்டது. மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்த செவிலியர் ஒருவர் அரசு கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் இருந்த போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஒருவாரகால சிகிச்சைக்கு பின் குணமடைந்த அவர், இன்று வீடு திரும்பினார். இதையடுத்து கரும்பாலை பகுதி மக்கள் அவருக்கு பூக்களை தூவியும், ஆரத்தி எடுத்தும் நெகிழ்ச்சியான வரவேற்பு அளித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்