மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்பு - காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சேலம் மாவட்டம் வீரகனூர் காவல் நிலைய ஆய்வாளர் ராம் ஆண்டவர் மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த புகாரின் பேரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2020-05-10 10:28 GMT
சேலம் மாவட்டம், வீரகனூர் காவல் நிலைய ஆய்வாளர் ராம் ஆண்டவர்,  மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த புகாரின் பேரில், பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள மணல் கடத்தல் கும்பலுடன், காவல் ஆய்வாளர் பேசிய செல்போன் உரையாடல் வெளியானது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ராம் ஆண்டவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்