"காந்தி மார்க்கெட் வியாபாரிகள் விவகாரம் : கள்ளிக்குடி வணிக வளாகத்தில் கடை திறந்த விவசாயிகள்"

77 கோடி ரூபாய் செலவில் கள்ளிக்குடியில் கட்டப்பட்ட புதிய வணிக வளாகத்திற்கு செல்ல திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் விரும்பவில்லை.

Update: 2020-04-27 08:42 GMT
77 கோடி ரூபாய் செலவில் கள்ளிக்குடியில் கட்டப்பட்ட புதிய வணிக வளாகத்திற்கு செல்ல திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் விரும்பவில்லை. இதனிடையே காந்தி மார்க்கெட் மூடப்பட்டது. இந்த சூழலில் தான் அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தலைமையில் கள்ளிக்குடி வணிக வளாகத்தில் விவசாயிகள், தாங்களே நேரடி விற்பனையை துவக்கினர். சந்தை மதிப்பை விட குறைவான விலைக்கு விற்பனை செய்வதால் ஏராளமான மக்கள் ஆர்வமாக வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்