மதுவுக்கு பதிலாக மெத்தனால் குடித்த நிகழ்வு - மேலும், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கடலூர் அருகே மதுவுக்கு பதிலாக மெத்தனால் குடித்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-04-15 08:37 GMT
ஆலப்பாக்கத்தை சேர்ந்த சந்திரகாசம், தனது நண்பர்களுடன் இணைந்து போதைக்காக மெத்தனால் குடித்துள்ளார்.  இதில் சந்திரகாசம் ஏற்கனவே இறந்த நிலையில், எஞ்சிய 4 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில், தற்போது, இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சிகிச்சை பெற்று வரும் மற்றொரு நபருக்கு கண் பார்வை பறிபோனது. இந்த விவகாரம் தொடர்பாக ரசாயன ஆலைக்கு சீல் வைத்த காவல்துறை,  ஊழியர் குமரேசன் என்பவரை கைது செய்தனர். மது கிடைக்காததால் சேவிங் லோசன், சானிடைசர், வார்னிஷ் உள்ளிட்டவை குடித்து மது பிரியர்கள் இறப்பதை தடுக்க நடவடிக்கை தேவை என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். 
Tags:    

மேலும் செய்திகள்