"144 தடை - கண்டதும் சுட உத்தரவு" - வேகமாக பரவும் தண்டோரா வீடியோ

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து, தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-03-25 02:12 GMT
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து, தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, ஈரோடு மாவட்டம் ஆசனூர் கிராமத்தில், தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது, 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால், கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி பணியாளர் அறிவித்தார். இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தண்டோரா வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்