144 தடை உத்தரவால் பீரங்கி உற்பத்தி பாதிப்பு - உற்பத்தி முடங்கியதால் ரூ.100 கோடி வரை இழப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சென்னை, ஆவடி பீரங்கி உற்பத்தி தொழிற்சாலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சென்னை, ஆவடி பீரங்கி உற்பத்தி தொழிற்சாலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆவடி உற்பத்தி தொழிற்சாலையில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், அரசின் தடை உத்தரவு காரணமாக வரும் 31 ஆம் தேதி வரை ஆவடியில், மத்திய பாதுகாப்பு துறை நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. உற்பத்தி பாதிப்பு காரணமாக இந்திய ராணுவத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.