"வங்கி கடன் தவணைகளை ஒத்திவைக்க வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்

கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புகளை கருத்தில் கொண்டு வங்கி கடன் தவணைகளை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-20 04:22 GMT
கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புகளை கருத்தில் கொண்டு, வங்கி கடன் தவணைகளை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான டிவிட்டர் பதிவில், இந்த குறிப்பிட்ட காலத்திற்கான வட்டியை, தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், இது தொடர்பாக பொதுத்துறை வங்கி அதிகாரிகளை முதலமைச்சர் அழைத்து பேச வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்