"பிராய்லர் கோழி மூலம் கொரோனா வதந்தி" - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க இலவசமாக சிக்கன் பக்கோடா வழங்கிய கோழிக்கறி கடை உரிமையாளர்

பிராய்லர் கோழி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக வந்த செய்தியை அடுத்து, சென்னை ஆதம்பாக்கத்தில் இலவசமாக சிக்கன் பக்கோடா வழங்கப்பட்டது.

Update: 2020-03-15 01:52 GMT
பிராய்லர் கோழி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக வந்த செய்தியை அடுத்து, சென்னை ஆதம்பாக்கத்தில் இலவசமாக சிக்கன் பக்கோடா வழங்கப்பட்டது. கோழிக்கறி மூலம் கொரோனா பரவுவதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியானது. இதனால் கோழிக்கறி விற்பனை பெரும் சரிவை சந்தித்துள்ளது. கோழிக்கறியில் கொரோனா இல்லை எனக் கூறும் விதமாக, சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள கோழி இறைச்சிக் கடை உரிமையாளர், இலவசமாக சிக்கன் பக்கோடா வழங்கினார். 


Tags:    

மேலும் செய்திகள்