கோழிகளுக்கு கொரோனா: வதந்தி பரப்பியவர் கைது - சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

கோழிகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியவரை நாமக்கல் போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-03-10 21:38 GMT
வலைதளத்தில் பரவிய பொய்யான தகவலால் பிராய்லர் கோழி விற்பனை சரிந்தது.  தமிழகத்தில் மட்டும்  சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த சைபர் கிரைம் போலீசார்,  ஊனம்பட்டியை சேர்ந்த பெரியசாமி என்பவரை கைது செய்தனர். வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிததுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்