உலக மகளிர் தின விழா உற்சாக கொண்டாட்டம் - பெண் காவலர்கள் கேக் வெட்டி, ஆடிப்பாடி மகிழ்ச்சி
சென்னை புதுவண்ணாரப் பேட்டை காவல் நிலைய சமுதாய நலக் கூடத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.;
சென்னை புதுவண்ணாரப் பேட்டை காவல் நிலைய சமுதாய நலக் கூடத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பெண் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமிக்கு மாலை அணிவித்து, கேக் வெட்டி , ஆடிப்பாடி மகளிர் தின விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.