மாநிலங்களவை தோ்தல் - திமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Update: 2020-03-08 09:52 GMT
தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான  தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதுவரை 2 சுயேட்சைகள் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் திமுக வேட்பாளர்களான திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் நாளை காலை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர். அதிமுக இதுவரை வேட்பாளர்கள் பெயரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்