சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் - தென்காசி நீதிமன்றத்தில் 3 பேர் சரண்

சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட விவகாரத்தில் தென்காசி நீதிமன்றத்தில் 3 பேர் சரணடைந்தனர்.

Update: 2020-03-06 09:45 GMT
சென்னையில் நாட்டு  வெடிகுண்டு வீசப்பட்ட விவகாரத்தில் தென்காசி நீதிமன்றத்தில் 3 பேர் சரணடைந்தனர். ரவுடிகளுக்கு ஏற்பட்ட மோதல் தொடர்பாக சென்னை அண்ணாசாலை அருகே நாட்டு  வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சிலர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் தென்காசி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 3 பேர் சரணடைந்தனர். சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த சதீஷ், ஹரீஷ், தமிழ்செல்வன் ஆகிய 3 பேரும் நீதிபதி பிரகதீஷ்வரன் முன் சரணடைந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்