தேசிய அளவிலான யோகா பயிலரங்கம் : தலைசிறந்த யோகா நிபுணர்கள் பயிற்சி விளக்கம்

சென்னை கே.கே நகர் மீனாட்சி நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் யோகா அறிவியல் மற்றும் சிகிச்சை புலம் சார்பில் தேசிய அளவிலான யோகா பயிலரங்கம் நடைபெற்றது.

Update: 2020-03-03 14:44 GMT
சென்னை கே.கே நகர் மீனாட்சி நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் யோகா அறிவியல் மற்றும் சிகிச்சை புலம் சார்பில் தேசிய அளவிலான யோகா பயிலரங்கம் நடைபெற்றது. இரண்டு நாட்களாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் யோகா, யோகா சிகிச்சை, ஆயுர்வேதம், சித்தா, இயற்கை மருத்துவம், நலவாழ்வு மற்றும் தியானம் உள்ளிட்ட தலைப்புகளில் தலை சிறந்த யோகா நிபுணர்கள் பயிற்சி விளக்கம் அளித்தனர். இந்தியாவில் பல பகுதிகளில் இருந்து பல்வேறு தலை சிறந்த யோகா நிபுணர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் யோகா குறித்து அறிவியல் பூர்வமாக ஆய்வு மேற்கொண்டு இருக்கும் சுமார் 150 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்