பியூஷ் மானுஷ் மீது 4 பிரிவுகளில் வழக்கு : மார்ச் 11ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு

வீட்டை அபகரித்த புகாரில் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Update: 2020-02-27 05:13 GMT
வீட்டை அபகரித்த புகாரில், சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். சேலத்தில் வாடகை வீட்டில் 2015ஆம் ஆண்டு முதல் பியூஷ் மானுஷ் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜனவரி மாதமே முடிந்துவிட்டதாகவும், அவர் இன்னும் காலி செய்யாமல் மிரட்டல் விடுப்பதாகவும், வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
Tags:    

மேலும் செய்திகள்