மகளிடம் காதலை கூற வந்ததாக நினைத்த தாய், மாணவனை செருப்பால் அடித்த தந்தை - விரக்தி அடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை

கொய்யா பழம் பறிக்க சென்ற போது ஏற்பட்ட பிரச்சினையில் மாணவன் ஒருவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-02-26 04:13 GMT
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல் காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி வேலு. இவரது மகன் 18 வயதான தங்கராஜ், வீட்டின் அருகே உள்ள கருணாகரன் என்பவரின் தோட்டத்தில் கொய்யாப்பழம் பறிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமி தனக்கும் கொய்யாப்பழம் வேண்டும் என கேட்டுள்ளார். 

அதற்கு தோட்டத்து உரிமையாளரான கருணாகரணின் மகளை கூட்டி வருமாறு சிறுமியிடம் தங்கராஜ் கூறியுள்ளான். இதனையடுத்து அந்த சிறுமி கருணாகரனின் மகளை அழைக்க சென்றுள்ளார். இதனை அறிந்த கருணாகரன், மாணவன் தங்கராஜை செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவன் தங்கராஜ் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது தந்தையும் தங்கராஜை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த மாணவன் , தனது மரணத்திற்கு கருணாகரன் மற்றும் அவரது மகள் தான் காரணம் என எழுதி வைத்து விட்டு, காட்டூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளி வளாக மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனையடுத்து உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் மரணத்திற்கு காரணம் கொய்யா பழம் பிரச்சினையா...? இல்லை காதல் விவகாரமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்