வேளாண் மண்டலம் தொடர்பான அறிவிப்பு - முதலமைச்சருக்கு விவசாயிகள் பாராட்டு விழா

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சருக்கு விவசாயிகள் கூட்டமைப்பு பாராட்டு விழா நடத்த உள்ளது.

Update: 2020-02-25 09:57 GMT
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சருக்கு, விவசாயிகள் கூட்டமைப்பு பாராட்டு விழா நடத்த உள்ளது. காவிரி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், திருவாரூரில் மார்ச் 7ஆம் தேதி, பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் எனக் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2014ஆம் ஆண்டு காவிரி விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்