"தமிழகத்தை புனரமைத்து செயலால் நன்றி சொல்வோம்" - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாமாண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு, செயலால் நன்றியை காட்டுவோம் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-21 08:48 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாமாண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு, செயலால் நன்றியை காட்டுவோம் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பல கேள்விகள், சவால்களுக்கு நடுவே ஆரம்பித்த இந்த பயணத்தில், தமது ஒற்றை நம்பிக்கை, முழு பலம், மொத்த சொத்து எல்லாமே நீங்கள் தான் என மக்களை சுட்டிக்காட்டி உள்ளார். தமது நன்றியை சொல்லில் இல்லாமல், தமிழகத்தை புனரமைத்து செயலில் காண்பிப்போம் என்றும், அந்த நம்பிக்கையோடு மூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் என்றும் அவர் பகிர்ந்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்