சிஏஏவுக்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவம் : பிப்-19ஆம் தேதி குடியரசு தலைவரிடம் வழங்குகிறது திமுக?

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, பெறபட்ட கையெழுத்து படிவங்களை வரும் 19ஆம் தேதி குடியரசு தலைவரிடம் திமுக எம்பிக்கள் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2020-02-16 08:27 GMT
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக , பெறபட்ட கையெழுத்து படிவங்களை வரும் 19ஆம் தேதி குடியரசு தலைவரிடம்  திமுக எம்பிக்கள் வழங்கவுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்ப பெறக்கோரி திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் கடந்த 2 ஆம் தேதி துவங்கி 8ஆம் தேதி வரை மக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்வு நடந்தது. அதில், இரண்டு கோடிக்கும் மேல் கையெழுத்து பெறப்பட்டதாக திமுக தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த கையெழுத்து படிவங்களை வரும் 19ஆம் தேதி குடியரசு தலைவரிடம் திமுக எம்பிக்கள் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்