துறை தலைவர் கண்டித்ததால் விஷம் குடித்த மாணவர் : பாலிடெக்னிக் கல்லூரியை முற்றுகையிட்ட சக மாணவர்கள்

சீர்காழி அருகே துறை தலைவர் கண்டித்ததால் அரசு பாலிடெக்னிக் மாணவர் விஷம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-02-12 02:59 GMT
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த புத்தூர் அரசு பாலிடெக்னிக்கில் தேர்வு நடைபெற்றது. இரண்டாம் ஆண்டு சிவில் இஞ்சினியரிங் படிக்கும்  மாணவர் பிரேம்குமார் தன்னுடைய விடைத்தாளில் எதுவுமே எழுதாமல் கொடுத்துள்ளார். இதனை சக மாணவர்கள் முன்னிலையில் துறை தலைவர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரேம்குமார் வகுப்பறையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக கொள்ளிடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்கு காரணமான துறை தலைவர் மீது நடவடிக்கை 
எடுக்க கோரி மாணவர்கள் கல்லூரி நுழைவு வாயிலை  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்