"நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது"

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2020-01-31 19:30 GMT
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். தனியார் மருந்தகத்தில் பணியாற்றி வரும் கட்டிமேடு கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார், நான்கரை வயது சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக கூறி மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியை காணவில்லை என தேடி கொண்டிருந்த தாய், இதை கண்டு அதிர்ச்சியடைந்து, சிறுமியை மீட்டதோடு, காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன்படி, தினேஷ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்