"திருமண கோலத்தோடு நெல் அறுவடை : விவசாயத்தை காக்க புது மணத் தம்பதி முயற்சி"

விவசாயம் காக்க திருமண கோலத்தோடு வயலில் இறங்கி தம்பதியினர் நெல் அறுவடை செய்தனர்.

Update: 2020-01-30 21:48 GMT
புதுக்கோட்டை மாவட்டம்  செரியலூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் பாலமுருகனும், திருச்சியை சேர்ந்த பட்டதாரி பெண் பவித்ராவும் திருமணம் செய்து கொண்டனர்.  திருமணம் செய்த கையோடு, மணக்கோணத்தில் கீரமங்கலத்தில் சென்ற தம்பதிகள், பாரம்பரிய நெல்லான மாப்பிள்ளை சம்பாவை கதிர் அறுத்தனர்.பாரம்பரிய விவசாயத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான், திருமணம் நடந்த கையோடு  வயலுக்கு வந்து நெல் கதிர் அறுத்ததாக புதுமணத் தம்பதியினர் தெரிவித்தனர். புது தம்பதியினர் மணக்கோலத்துடன்  அறுவடை செய்ததை அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர்.  
Tags:    

மேலும் செய்திகள்