நெல்லை கண்ணன் கைது - சீமான் கண்டனம்

நெல்லைக்கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-01 22:32 GMT
நெல்லைக்கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லைக்கண்ணன் கைது என்பது, தமிழுக்கும், தமிழர்க்கும் நேர்ந்த அவமானம் என கூறியுள்ளார். மேடை பேச்சுகளுக்குக் கைது என்றால், பாஜகவின் எந்தத் தலைவரும் வெளியில் இருக்கத் தகுதியற்றவர்கள் என்று கூறியுள்ளார்.  உடல் நலம் பாதிக்கப்பட்ட நெல்லை கண்ணன் மீது புனையப்பட்ட வழக்குகளை ரத்துச் செய்து, தமிழக அரசு, உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்